ஈரோடு, டிச.13- ஈரோடு மாநகராட்சியில், தூய்மைப்பணி யாளர்களுக்கு எதிராக நடைபெறும் ஊழி யர் விரோத நடவடிக்கையை கண்டித்து, தூய்மைப் பணியாளர்கள் 24.12.2024 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக சிஐடியு அறிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாந கராட்சியில் பொது சுகாதாரப் பணி மற்றும் டெங்கு, மலேரியா கொசு ஒழித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகள், குடிநீர் வழங்கல், விநி யோகம் ஆகிய பணிகளை மாநகராட்சி செய்து வருகிறது. இந்த பிரிவுகளில் தேவை யான அளவிற்கு இல்லாமல் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே நிரந்தர ஊழியர்கள் உள்ளனர். கிராம ஊராட்சிகளை மாநக ராட்சியாக இணைக்கப்பட்ட போது பணி யிலிருந்தவர்கள் மாநகராட்சி ஊழியர்க ளானார்கள். இதுவரை அவர்களை ஊழியர் கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பொது சுகாதாரப்பணியை மாநகராட்சியே நேரடியாகச் செய்திட வேண்டும். பாரபட்ச மின்றி அனைத்து பணியாளர்களுக்கும் சீருடை வழங்க வேண்டும். தூய்மைப் பணி யாளர்களுக்கு 5, 10 நிமிடங்கள் கால தாமதத் திற்குக் கூட ஆப்சென்ட் போடப்படுகிறது. தற் போது பயோமெட்ரிக் முறையில் செல்போன் செயலியில் முகத்தை படம் எடுத்து வருகை பதிவேடு எடுக்கப்படுகிறது. காலையில் பணி துவங்கும்போது வார்டு அலுவலகத்தில் ஒரு முறை மட்டுமே படம் எடுக்கும் முறை அம லாக்க வேண்டும். வாகனங்கள் பற்றாக்குறை, குப்பை கொட்டும் இடத்தில் இட நெருக்கடி, ஜேசிபி வாகனங்கள் பற்றாக்குறை, காய்கறிக் கழிவு கள் கட்டாயம் கொடுக்க வேண்டும் என கிலோ கணக்கில் இலக்கு வைப்பது, பணிக்கருவி கள் பற்றாக்குறை ஆகியவையும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். குப்பை சேகரிக்கும் வாகனத்தில் பணியாற்றுவதற்கு மாதம் ரூ.1000 நபர் ஒன்றுக்கு தர வேண்டும் என்ப தும், இன்னும் பல வழிகளில் முறைகேடாக தூய்மைப் பணியாளர்களிடம் பணம் வாங்கு வது என்ற முறைகேடுகளும் நடக்கிறது. இது குறித்து பலமுறை மாநகராட்சிக்கு தெரிவித் தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த மோசடி நிறுத்தப்பட வேண்டும். மாநகராட்சிக்கு இதுகுறித்து மூன்று முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, வருகின்ற 24.12.2024 முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.