districts

ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை, ஜன.25 - மயிலாடுதுறை ஒன்றியம் கடலங்குடி யில் ரேசன் கடை மூலம் ஏழை, எளிய மக்க ளுக்கு வழங்கக் கூடிய அரிசி மிகவும் தரமற்ற தாக புளுத்துப் போனதாக உள்ளது. தரமற்ற  அரிசி வழங்குவதை கண்டித்து தொடர்ந்து முறையிட்டும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி யதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப ட்டனர். கடலங்குடி ரேசன் கடைகளில் கடந்த பல  மாதங்களாக தரமற்ற அரிசியே வழங்கப்படு வதாகவும், இதுகுறித்து பலமுறை சம்பந்தப் பட்ட வட்ட வழங்கல் அலுவலர், அரசு அதிகாரி களிடம்  முறையிட்டும் எந்த நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளாத நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் திங்களன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் கிளை செய லாளர் எஸ்.சுகுமாரன் தலைமை வகித்தார். கே.ஆர்.எஸ் பாஸ்கர், வாலிபர் சங்க வட்டக் குழு உறுப்பினர் ஏ.பாக்கியராஜ் மற்றும்  மாவட்ட குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடனடி யாக தரமில்லாத அரிசிகளை மாற்றித் தர வில்லையெனில் போராட்டங்களை தொ டர்ந்து நடந்துவோம் என எச்சரித்தனர்.