districts

ஒரு வாரமாக தண்ணீர் இல்லை கிராம மக்கள் சாலை மறியல்

பாபநாசம், மே 28-

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள திருவைக்காவூர்  கீழமாஞ்சேரியில்  ஒருவார காலமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவ லறிந்து பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றியக் கவுன் சிலர் விஜயன்,  கபிஸ்தலம் காவல்துறையினர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.