கரூர், ஜூன் 28 - கரூர் மாவட்டம், புகளூர் வட்டத்திற்குட்பட்ட பள்ள மருதப்பட்டி, குரும்பப்பட்டி, பாரதி நகர், சாலைப் பாளை யம், ஜெயந்தி நகர், கருடை யம்பாளையம், கிழக்கு காலனி, முத்து நகர், புன்னம் சத்திரம், வேலாயுதம்பாளை யம், அண்ணா நகர், காந்தி நகர், நாணப் பரப்பு, புஞ்சை தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற் றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப் பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை - எளிய மக்கள் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு, பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் இன்றுவரை இலவச வீட்டு மனைப் பட்டாவை புகளூர் வட்டாட் சியர் வழங்கவில்லை. மனு கொடுத்த அனைவரும் இலவச வீட்டு மனை பட்டா வாங்குவதற்கு தகுதியான வர்கள் என்று வருவாய்த் துறை விசாரணையில் பரிந் துரை செய்தும், இந்த மக்க ளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்காமல் கோரிக் கையை கிடப்பில் போட்டு உள்ளனர். இதனை கண்டித்தும், உடனடியாக மனு கொடுத்த அனைவருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.சர வணன் தலைமையில் புக ளூர் வட்டாட்சியரிடம் மனுவை வழங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியச் செயலாளர் எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.