மயிலாடுதுறை, ஜன.22- மயிலாடுதுறை மாவட்டம் ,தரங்கம் பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் புத னன்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். செம்பனார்கோவில் வட்டாரத்தில் நிக ழாண்டு சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி பெய்த கனமழையின் கார ணமாக செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள திருவிளையாட்டம், காட்டுச் சேரி, திருவிடைக்கழி, விசலூர், தில்லையாடி, கீழையூர் , ஆக்கூர், நல்லாடை , திருக்க டையூர் மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பல ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சம்பா நெற் பயிர்களை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார் ஆய்வின்போது விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களை காண்பித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இந்த ஆய்வின்போது வேளாண் துறை அதிகாரிகள் திமுக ஒன்றிய செயலாளர்கள் அமுர்த.விஜயகுமார், அன்பழகன், மாலிக் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்