கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிவாலயத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்ட செயல்முறைக் கிடங்கு வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தை ஜன.28 அன்று, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் திறந்து வைத்தனர்.