திருச்சிராப்பள்ளி, ஜன. 1 - அரியமங்கலத்தில், வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறு மிகள் உட்பட 4 பெண்கள் உயிரி ழந்தனர்.
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பி காபுரம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தாயார் சாந்தி (70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) என 5 பேர் வசித்து வந்தனர். மாரிமுத்துவின் தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால், அந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க மாரிமுத்து ஞாயிறன்று சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அன்றிரவு வீட்டில் சாந்தி, விஜய லட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால், இச்சம்பவம் குறித்து அப்பகுதியினர் யாருக்கும் தெரியவில்லை.
திங்களன்று அதி காலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மாடிக்கு சென்ற போது எதேச்சையாக பார்த்துள் ளார். அப்போது மாரிமுத்து வீட்டின் மேற்கூரை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் அடிப்படையில் அரிய மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அரியமங்கலம் ஆய்வாளர் திருவானந்தம் தலைமை யிலான போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட தோடு, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத் தனர். திருச்சி தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.
புத்தாண்டு நாளில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, அரியமங்கலம் போலீ சார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.