districts

img

பள்ளியில் புதிய சுற்றுச்சுவர் அமைப்பு

பாபநாசம், ஜன.19 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டை அருகே ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 40-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இப்பள்ளியின் முன்புறமுள்ள  சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்திருந்தது. இதேபோன்று பக்கவாட்டு சுற்றுச்சுவ ரின் இரு பக்கங்களில் ஒரு பகுதி இடிந்த நிலையில் இருந்தது. மாணவர்களின் பாது காப்புக் கருதி, சுற்றுச்சுவரின் இடிந்த பகுதி க்குப் பதிலாக, புதிதாக சுவர் கட்ட மாண வர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து  வந்தனர்.  இதுகுறித்த செய்தி தீக்கதிரில் நாளித ழில் தொடர்ந்து வெளியானது. இதை யடுத்து இடிந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதிக்குப்  பதில், புதிதாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தீக்கதிர்  நாளிதழுக்கு மாணவர்களின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.