பாபநாசம், மார்ச் 8- திமுக தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கோவி. இளையராஜாவின் புது மனை புகுவிழா பாபநாசத்தில் நடைபெற்றது. விழாவில் திமுக ராஜ்ய சபா எம்.பிக்கள் குழுத் தலைவர் சிவா, எம்.பிக்கள் பட்டவர்த்தி சண்முகம், முரசொலி, அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கலைச் செல்வன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம், கும்பகோணம் துணை மேயர் தமிழழகன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் குட்டி தெட்சிணாமூர்த்தி உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள், மாற்றுக் கட்சியினர், வழக்கறிஞர்கள் உட்பட பங்கேற்றனர். திமுக மாவட்ட துணைச் செயலர் கோவி.அய்யா ராசு, தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கோவி. இளையராஜா, பிரியா இளையராஜா, செழியன், நிரஞ்சன் வரவேற்றனர்.