districts

img

நெல்லைக்கு புதிய காவல் ஆணையர் நியமனம்

திருநெல்வேலி,  ஆக.4- சென்னை காவல்துறை தலைமையகத்தில் ஐஜியாக  பணியாற்றி வந்த ரூபேஷ் குமார் மீனா ஐபிஎஸ் ஐஜி அந்தஸ்தில் திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையாளராக நியமிக்கப் பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் பதவி டிஐஜி அந்தஸ்திலிருந்து மீண்டும் ஐஜி அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளராக டிஐஜி அந்தஸ்தில் இருந்த  மூர்த்தி ஐபிஎஸ் திரு நெல்வேலி ,தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருநெல்வேலி சரக டிஐஜி யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திருநெல் வேலி சரக டிஐஜி யாக இருந்த பிரவேஷ்குமார் வட சென்னை கூடுதல் சட்டம்  ஒழுங்கு காவல் ஆணையா ளராக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.