districts

img

திருச்சி விமான நிலையத்திற்கு புதிய பேருந்து சேவை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி, ஆக,19 திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தை கடந்த ஜனவரி மாதம்  பிரதமர் மோடி துவங்கி வைத் தார். சர்வதேச தரத்தில் அமைந்துள்ள புதிய முனை யம் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. ஆனால்,  புதிய விமான முனையத்தி ற்கு, திருச்சி- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணிகள் நடக்க வேண்டிய நிலையுள்ளது. அங்கு சுமைகளுடன் வந்து செல்லும் பயணி களை அழைத்து செல்ல ஆட்டோவுக்கு அனுமதி இல்லை. இதனால் கார்க ளில் செல்ல முடியாத பயணி கள் பெரும் அவதிக் குள்ளாகி வந்தார்கள். இந்தநிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திங்கள் அன்று கொடிய சைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து  திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்கு தினந் தோறும் மூன்று முறை அரசு போக்குவரத்து சேவை துவங்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலை யத்தில் இருந்து, மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங் கம், சமயபுரம் டோல்கேட் ஆகிய பகுதிகளுக்கு தின மும் அரசு பேருந்து சேவை திங்கள் முதல் நடை முறைக்கு வந்துள்ளது. அதேசமயம் விமான நிலையம் வாயில் வரை வந்துசெல்லும் அனைத்து பேருந்துகளையும், புதிய முனையம் வரை இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆனையர் சரவணன், தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர்  இரா. பொன்முடி , திருச்சி விமான நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன், தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டல பொது மேலாளர் முத்து கிருஷ்ணன், துணை மேலா ளர் (வணிகம்)  புகழேந்தி ராஜ் , உதவி மேலாளர்( தொ ழில்நுட்பம்)  ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.