புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் ரூ.52 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி, ஒன்றியக் குழு தலைவர் சுதா அடைக்கலமணி, வட்டாட்சியர் சாந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.