பாபநாசம், ஜன.5- தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத் தில் பல்வேறு ஊராட்சிக ளில் ரூ.ஒரு கோடியே 86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ராராமுத்திரக் கோட்டை ஊராட்சியில் ரூ 17.40 மதிப்பில் பொது விநியோக கட்டடம், கீழ கோவில் பத்து ஊராட்சியில் ரூ 42.65 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டடம், அருந்தவ புரம், உக்கடை, நெடுவாசல், ஊராட்சிகளில் ரூ 41.55 லட்சம் மதிப்பில் அங்கன் வாடி கட்டடங்கள், பள்ளியூர் ஊராட்சியில் ரூ 38 லட்சம் மதிப்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், தேவராயன் பேட்டையில் ரூ 29.60 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் உள்ளிட்டவற்றை, பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு அமைச்சர் கோவி செழியன் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து கோ வத்தகுடி ஊராட்சியில் மரக் கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்க ஜம், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜ யன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணைத் தலைவர் எஸ்.கே.முத்துச் செல்வன், அம்மாபேட்டை ஒன்றி யக்குழு தலைவர் கே. வீ. கலைச்செல்வன், துணைத் தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், மாவட்ட, ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் கள், ஒப்பந்தத்தாரர்கள், அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், ஊராட்சிச் செயலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பிர முகர்கள், பொது மக்கள் உட்பட கலந்துக் கொண்ட னர்.