கரூர், பிப்.2- அங்கன்வாடி மையம், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட வூர் ஒன்றிய கவுன்சிலர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் மாவத்தூர் ஊராட் சியில் ஒன்றிய பொது நிதி, எம்ஜிஎன்ஆர்ஜி திட்டத்தின் கீழ் தாசி ரெட்டியபட்டியில் ரூ.13.97 லட்சத்தில் கட்டப் பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடம், குலக்காரம் பட்டியில் ரூ.12.60 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி திறப்பு விழா நடை பெற்றது. அங்கன்வாடி மையம், புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட வூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சி லர் பி.ராமமூர்த்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசினார். மாவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் கீதா செந்தில்மோகன், துணைத் தலைவர் பிரபாகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கடவூர் ஒன்றியச் செயலாளர் பி. பழனிவேல் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.