நாகர்கோவில், ஆக. 4- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாழையத்துவயல், கீரிப் பாறை பகுதிகளின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டுள்ளன. மக்கள் சுதந்தி ரமாக நடமாட முடியாத திறந்த வெளிச் சிறையாக மாற்றப்பட்டு உள்ள பகுதிகள் இவை. வனத் துறையால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு பொதுப் போக்கு வரத்தே இல்லாமல் முடக்கப் பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தரமான கிராம்பு, மிளகு, ஜாதிக் காய் போன்ற வாசனைத் திரவி யங்கள், ரப்பர் போன்ற பணப் பயிர்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படும் மலைப் பகுதி மாறாமலை. அதன் அடி வாரத்தில் உள்ள கீரிப்பாறையில் தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான தோட்டமும், ரப்பர் பதனிடும் தொழிற்சாலையும் உள்ளன. இது சாஸ்திரி-சிரி மாவோ ஒப்பந்தத்தின் அடிப்படை யில் இலங்கையில் இருந்து தாய கம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரமாகும். அவர்களுக் கான குடியிருப்புகளும் இங்கு உள்ளன. இது தோவாளை ஒன்றி யத்தில் தடிக்காரன்கோணம் ஊராட் சிக்கு உட்பட்ட பகுதியாகும்.
வனத்துறையினர் அத்து மீறல்
தடிக்காரன்கோணம் ஊரா ட்சிக்கு உட்பட்ட வாழையத்து வயல், புதுநகர், கீரிப்பாறை, பால்குளம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் சுருளகோடு ஊராட்சியில் மலை வாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் வெள்ளாம்பி ஆகிய பகுதிகள் தற்போது வனத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பல தலைறைகளாக இப்பகுதி களில் குடியிருக்கும் மக்களால் பழுதடைந்த தங்கள் வீடுகளைக் கூட சீரமைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. 2017 ஓகி புய லில் பழுதடைந்த சுமார் 70 வீடு கள் சீரமைக்கப்படாமலே உள்ளன. தொண்டு நிறுவனம் ஒன்று சீரமைப்பதற்கான பொருட் களுடன் வந்தபோது வனத்துறையி னர் தடுத்துவிட்டனர் என்கிறார் வாழையத்து வயல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எஸ். ராஜன். இரவு நேரங்களில் இப்பகுதி யில் வசிக்கும் மக்களின் உறவி னர்கள் வந்தால் செக்போஸ்ட்டை தாண்டி அனுமதிப்பது இல்லை. அவர்களின் உறவினர்கள், ஆதார் உள்ளிட்ட ஆதாரங்களை எடுத்து சென்று உறவினர்களை அழைத்து வரும் அவல நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். எனவே, முன்பு இருந்த மாதிரியே வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியை மாற்ற வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில், வாழையத்து வயல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கிராமப் பகுதிகள் மற்றும் மலை வாழ் பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரு கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் தடிக்காரன்கோணம் ஊராட்சியில் இருந்து எந்த நிதியும் ஒதுக்கப்பட வில்லை. நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. எந்த பணி யும் நடக்கவில்லை. ஊராட்சி மன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பி னர் கேட்டால் வனத்துறையினரை காரணம் காட்டுகிறார்கள். ஆனால் 3 மடங்கு வீட்டுவரி, தண்ணீர் வரி உட்பட வசூலிக்கிறார்கள் என்றார். குடிநீர், மின்சாரம் பிரச்சனை இப்பகுதிகளுக்கு கீரிப்பாறை யில் இருந்து குடிநீர் வினியோ கிக்கப் படுகிறது. மின்சாரம் இல்லை என்றால் குடிநீர் வராது. இங்கு சுமார் 80 சதவீதம் மின்சாரம் வினியோகிப்பது கிடையாது. கேட்டால் பெரிய மரங்கள் மீது மின் ஒயர் உராய்வதாக கூறுகின்ற னர். அந்த மரங்களை வெட்ட மின்வாரியத்திற்கு அனுமதி இல்லை என்கின்றனர். அதனால் இப்பகுதி இருளில் மூழ்கி வரு கிறது. மேலும், கீரிப்பாறையில் இருந்து கொண்டு வரப்படும் குடி நீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே நேரடியாக விநியோகம் செய்கின்றனர். அதனால் அந்த குடி நீர் மாசு படிந்தும், மண் கலந்தும் செம்மண் நிறத்தில் தண்ணீர் வரு கிறது. எனவே சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை சுத்திகரித்து வழங்க வேண்டும் என்கிறார்கள் இங்குள்ள மக்கள்.
அரசுப் பள்ளியின் அவலம்
வாழையத்து வயல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்ற னர். இந்த பள்ளியும் வனத்துறை யின் இடத்தில் உள்ளது. அதனால் விளையாட்டு மைதானம் இல்லை. மேலும், போதிய அளவிலான ஆசிரியர்கள் இல்லை என்பதால் கல்வித்தரம் குறைந்ததால் அங்கு படித்த மாணவர்கள் பலர் தனி யார் பள்ளிக்கு சென்றுவிட்டனர். கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. எனவே இந்த கட்டிடங்களை புதுப்பித்தும், போதுமான ஆசிரியர்களை நியமித் தால் அதிக அளவிலான மாண வர்கள் இங்கு சேர்ந்து படிப்பார் கள். வங்கி மற்றும் பணம் பரி வர்த்தனை செய்ய வேண்டுமா னால் தடிக்காரண் கோணம் பகுதிக் குத்தான் செல்ல வேண்டும். எனவே, இங்கு கிராம வங்கி அமைக்க வேண்டும். ஏடிஎம் வசதி செய்ய வேண்டும்.
தனி ஊராட்சி கோரிக்கை
கூவைக்காடு மலைப் பகுதி யைச் சேர்ந்த பழங்குடியைச் சேர்ந்த வேலாயுதன் காணி என்ப வர் தெரிவிக்கையில், எங்கள் பகுதி தடிக்காரண் கோணம் ஊராட் சிக்கு, தோவாளை ஊராட்சி ஒன்றி யத்துக்கு அருகில் உள்ளது. ஆனால், சுருளகோடு ஊராட்சியி லும், திருவட்டார் ஊராட்சி ஒன்றி யத்திலும் இணைக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கின்றது. எங்கள் பகுதி மக்கள் அரசு சம்பந்தமான வேலைகளுக்கு திருவட்டார் தாசில் தார், பிளாக் ஆபீஸ் செல்ல 3 பஸ் ஏறி சுமார் 50 கி.மீ சுற்றித்திரிய வேண்டும். பணச் செலவும், நேர விரயமும் ஏற்படுகிறது. எனவே எங்கள் மலை வாழ் பகுதியை தோவாளை ஊராட்சி ஒன்றியத் திற்கு மாற்றியும், அருகில் உள்ள வாழையத்து வயல் பகுதியை மையமாக கொண்டு புதிய ஊராட்சி யும் அமைத்திட வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தோவாளை வட்டாரச் செயலா ளர் எஸ்.மிக்கேல் கூறுகையில், இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு நேரத்தில் சோதனை சாவ டியை கடக்க முடியாது. இதனால், குடியிருப்பையே மாற்றி சிலர் வாடகை வீடுகளுக்குச் சென்றுள்ள னர். ஆனால், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வாசனைத் திர வியங்களும், ரப்பரும் இங்குள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படுகிறது. இவை 50க்கும் குறைவான முதலாளி களிடம் உள்ளன. வனத்துறை சோதனைச்சாவடி களில் அவர்களுக்கு எவ்வித கட்டுப் பாடுகளும் இல்லை. வன விலங்கு சரணாலயம் இத்தகைய பாகுபாடு களுக்கு எதிராகவும், இங்குள்ள மக்களின் வாழ்வாதார உரிமை களுக்காகவும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப் போம் என்றார்.
பயோனியர் எஸ்டேட் நிலம்
இப்பகுதியில் உள்ள பயோனியர் ரப்பர் எஸ்டேட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கைப்பற்றப்பட்டது. இதில் சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் உள்ள ரப்பர் மரங்களை அரசு ரப்பர் கழகத்தின் மூலம் பால்வடிப்பு செய்தால் 50 பேர் வரை வேலை வாய்ப்பும் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாயும் கிடைக்கும். இதன் ஒரு பகுதியை நிலமற்ற ஏழை மக்களுக்கு வீட்டு மனைகளாகவும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.