districts

img

நெடுவாசல் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமம்

புதுக்கோட்டை, ஏப்.30 - 16 வயது கனவுகளுடன் 66 வயதில்  சங்கமித்த புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசல் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள்  சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை  அடுத்த நெடுவாசல் அரசு உயர்நிலைப் பள்ளி யில் 1973-74 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள்  50 ஆம் ஆண்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் சந்தித்தனர். இந்நிகழ்விற்கு எஸ்.குழந்தைச்சாமி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற காவல்  துணைக் கண்காணிப்பாளர் கே.மாணிக்க வாசகம், தலைமை ஆசிரியர் எம்.தங்கராசு,  ஊராட்சி மன்றத் தலைவர் கே.தெட்சிணா மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். ஓய்வுபெற்ற தொழில் முதலீட்டுக் கழக மேலாளர் ஆர்.விவேகானந்தன் சிறப்புரையாற்றினார். வி. சாரதாம்பாள் நன்றி கூறினார். 66 வயதைக் கடந்த 6 முன்னாள் மாணவி கள் உட்பட 30 முன்னாள் மாணவர்கள், இவர்களின் பேரன்-பேத்தி என 130 பேர்  பங்கேற்ற நிகழ்வு நெகிழ்ச்சியான அனுபவ மாக இருந்தது. கல்விக்காக ரூ.25 லட்சம்  நிதி திரட்ட முடிவு கூட்டத்தில் 1963 முதல் நெடுவாசல் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் மாநாட்டை நடத்துவது, இம்மாநாட்டில், பள்ளியின் ‘அறிவியல் ஆய்வு  மற்றும் அறி வியல் மனப்பான்மை கல்விக்கான’ நிரந்தர  நிதிக்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் முன்னாள் மாணவர்கள் மூலம் திரட்டுவது என  முடிவெடுக்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.25,000 நிதி பள்ளிக்கு அளிக்கப்பட்டது.