districts

img

வக்பு வாரிய தலைவராக நவாஸ்கனி எம்.பி., தேர்வு

சென்னை, செப்.19- தமிழக பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்க ளுக்கான தேர்தலில், பிரி வில் ஒரு காலியிடத்துக்கு தேர்தல் கால அட்டவணை செப்டம்பர் 6 அன்று அறி விக்கப்பட்டது. இதில் மக்க ளவை முஸ்லிம் உறுப்பி னர்கள் பிரிவுக்கு நவாஸ் கனி எம்பி, வேட்புமனு தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிடாததால் தமிழ்நாடு வக்பு வாரிய விதிகளின்படி, நவாஸ்கனி தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்”என்று அறிவித்தது. இந்நிலையில், இராம நாதபுரம் மக்களவை உறுப் பினர் நவாஸ்கனி தமிழ்நாடு வக்பு போர்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, தலை மை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  பின்னர்  நவாஸ்கனி ஆகியோர் செய்தியாளர்களி டம் கூறுகையில்,  சிறுபான்மையினரின் நலனில் அக்கறை உள்ள அரசு நடைபெற்று கொண்டி ருக்கும் நிலையில் வாரிய பிரச்சனைகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்காமல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்படுவோம். வகுப்பு வாரிய சொத்துகளுக்கு தடையில்லா சான்று கொடுப் பதை நிறுத்தி விட்டு பழைய நிலையில் சொத்துக்களை, பதிவு செய்யும் முறையை  கொண்டு வர நடவடிக்கை கள் எடுப்போம்”என்றார்.