மன்னார்குடி, டிச.8 - நாட்டிற்காக முப்படை வீரர்கள் செய்த அரும்பணிகளையும் தியாகத்தையும் போற்றும் வகையில் டிசம்பர் 7 ஆம் தேதி கொடி நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. பொது மக்களிடம் பெறப்படும் நன்கொடைகள் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும் பத்திற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்கும் செலவிடப்படு கிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சி யரிடமிருந்து பெறப்பட்ட உண்டியல் மூலம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி 2 ஆம் ஆண்டு கப்பற்படை என்சிசி மாணவர் கள், என்சிசி அதிகாரி முனைவர் எஸ்.அன்பரசு வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர் களிடம் கொடி நாள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி நிதி வசூல் செய்தனர். வசூல் செய்யப்பட்ட நிதியினை கப்பப் படை என்சிசி மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் எம்.திலகர் முன்னிலையில் மன்னார் குடி வருவாய் கோட்டாட்சியர் ர.கீர்த்தனா மணி-யிடம், ஒப்படைத்தனர்.