திண்டுக்கல், ஆக.21-
தென்காசியில் நடை பெறும் தேசிய யோகாசன போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் தேர்வு திண்டுக்கல் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. 700-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனை கள் பங்கேற்றனர்.
தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் வரு கிற செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தென்காசியில் நடைபெறுகிறது.
இதனையொட்டி திண்டுக்கல்லில் திண்டுக்கல் மாவட்ட யோகா சன சங்கம் சார்பாக திண்டுக் கல் மாவட்ட உள் விளை யாட்டு அரங்கில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பங் கேற்கும் வீரர் வீராங்கனை கள் தேர்வு நடைபெற்றது.
இந்த போட்டிகளில் ஆசானம், ஆர்டிஸ்டிக், ஆர்டிஸ் டிக் ஃபேர். ரிதமிக், பிரிபிளோ, ஆகிய யோகாசன போட்டிகள் வயதின் அடிப்படையில் 10 முதல் 12 வயது, 12 முதல் 14 வயது. 14 முதல் 16 வயது மற்றும் 16 வய துக்கு மேல் உள்ளவர் களுக்கு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.
இந்த போட்டியில் 35 வீரர், வீராங்கனைகள் திண்டுக்கல் லில் இருந்து தேர்வு செய் யப்பட்டு தென்காசியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டி களில் பங் கேற்க உள்ளனர்.