districts

img

தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி

கரூர், ஆக.7-

     9 ஆவது தேசிய கைத்தறி தினத்தை  முன்னிட்டு நெசவாளர்களால் தயா ரிக்கப்பட்ட கைத்தறி சிறப்பு கண்காட்சி அரங்கினை, கரூர் வெங்கமேட்டில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் திறந்து வைத்தார். இதில், 10 நெசவா ளர்களுக்கு முத்ரா திட்டத்தில் ரூ.6 லட்சம்  மதிப்பீட்டில் கடன் உதவிகள், 2 நெசவா ளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கினார்.

     இக்கண்காட்சியில் நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட கதர் சேலை, கதர் ரகங் கள், தரை விரிப்பு, மெத்தை விரிப்பு, குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் விரிப்புகள், கைத்தறி பட்டு ரகங்கள், போன்ற பல்வேறு கைத்தறி ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. நெச வாளர்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பொதுமக்கள் அதிக அளவில் கைத்தறி ரகங்களை பயன்படுத்தி, நெச வாளர்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதற்கு ஆதரவு தர வேண்டும் என ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.