districts

img

சோத்துப்பாறை, வைகை அணையில் தேசிய அணைகள் பாதுகாப்புக்குழு ஆய்வு

தேனி, ஜூன் 13- சோத்துப்பாறை,வைகை அணை களில் தேசிய அணைகள் பாதுகாப்புக்குழு வினர் புதனன்று ஆய்வு மேற்கொண்டனர்.  பெரியகுளம் சோத்துப்பாறை அணை யின் தரம் குறித்து தேசிய அணைகள் பாது காப்புக் குழு தென் மண்டல தலைவர் அஜய் குமார் சின்ஹா தலைமையிலான 10  குழு வினர் ஆய்வு செய்தனர். பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு விவசாயம் மற்றும்  குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகின்றது. இதற்கான பணிகள்  1982 ஆம் ஆண்டு துவங்  கப்பட்டு 1997 ஆம் ஆண்டு இந்த அணை  கட்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 126.28 அடி  நீர்மட்டம் கொண்ட இந்த அணை சுற்று லாத்தலமாக இருந்து வருகின்றது . இந்நிலையில் புதன்கிழமை  சோத்துப் பாறை அணையின் தரம் குறித்து தேசிய அணைகள் பாதுகாப்புக்குழு தென் மண் டல தலைவர் அஜய் குமார் சின்ஹா தலை மையிலான 10 பேர் கொண்ட குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்னர். இந்த ஆய்வில் சோத்துப்பாறை அணை யின் கட்டிட உறுதித் தன்மை,  வெள்ளப் பெருக்கு காலங்களில்  அணையின் பாது காப்பு மேம்பாடு குறித்தும் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர். இதனைத்  தொடர்ந்து சோத்துப்பாறை அணையின் சுரங்க பாதைக்குள் சென்று பார்வை யிட்டனர்.  பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) உதவி செயற்பொறியாளர் சௌந்தரம் ,  உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்  ளிட்டோர் உடனிருந்தனர்.

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே  அமைந்துள்ள தேனி, மதுரை, திண்டுக்கல்,  சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து  மாவட்டங்களின் நீராதாரமான   வைகை அணையில் தேசிய அணைகள் பாது காப்புக்குழு தென் மண்டல தலைவர் அஜய்குமார் சின்ஹா தலைமையிலான  அணைகள் பாதுகாப்பு குழுவினர் 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற் கொண்டனர் வைகைஅணை உதவி செயற்பொறி யாளர் அலுவலகம் வந்து அணையின் மதகு  பகுதிக்கு வந்த குழுவினர் அணையின் தரம், கட்டிட உறுதி தன்மை குறித்தும்  அணையில் உள்ள நீர்த்தேக்க பகுதி யில் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு மேற் கொண்டனர். வெள்ளப்பெருக்கு காலங்களில்  அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அணைப்பகுதிகளில் ஆண்டு தோறும் நடைபெறும் பராமரிப்பு பணிகள் குறித்தும் வைகை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்த னர். இந்த ஆய்வின் போது வைகை அணை பொதுப்பணித்துறை உதவி செயற்  பொறியாளர் முருகேசன் மற்றும்  பொதுப்  பணித்துறை அதிகாரிகளும் பணியா ளர்களும் உடனிருந்தனர்.