districts

திருச்சி முக்கிய செய்திகள்

தேசிய கல்லூரிகள் தரவரிசை பட்டியல்  கும்பகோணம் அரசினர்  கலைக் கல்லூரி 96 ஆவது இடம்

கும்பகோணம், ஆக.14 - தேசிய கல்லூரிகள் தரவரிசை பட்டியலில், தமிழ கத்திலேயே கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி 5  ஆவது இடம் பெற்றுள்ளது.  இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் அ.மாதவி தெரிவிக்கையில், “தென்னிந்திய ஆக்ஸ்போர்ட் என  அழைக்கப்படும் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி  (தன்னாட்சி) பல்வேறு அறிஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமான மாணவர்களை உருவாக்கியது. இந்நிலையில் 2024 தேசியக் கல்லூரிகள் தரவரிசைப் பட்டியல் (NIRF) அண்மையில் வெளியிடப்பட்டது. அதில்  தேசிய அளவில் 3371 கல்லூரிகளில் முதல் 100 இடங்களுக் குள்  கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி 96 ஆவது  இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழ்நாடு  அளவில், அரசு கல்லூரிகளில் 5 ஆவது இடமும் பெற்று உள்ளது” என்றார்.

மருதுபாண்டியர் கல்லூரியில்  ‘மேக்ரோ பாசி’ தயாரிப்பு கருத்தரங்கம்

தஞ்சாவூர், ஆக.14 -  தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் உயிர் அறிவி யல் துறைகள் சார்பாக, மேக்ரோ பாசி தயாரிப்புகளில் ஆராய்ச்சி நுணுக்கங்கள் என்னும் தலைப்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்  மா.விஜயா முன்னிலை வகித்தார். துணைமுதல்வர் ரா.தங்கராஜ், ஆராய்ச்சி புலத்தலைவர் கோ.அர்ச்சுனன், கல்லூரி வேதியியல் விஞ்ஞானி ஞானபிரகாசம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  விழாவில் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடல் பாசி ஆராய்ச்சி நிலையம், மத்திய உப்பு ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி வி.வீரகுருநாதன் கலந்து கொண்டு, “மேக்ரோ  பாசி தயாரிப்புகளில் ஆராய்ச்சி நுணுக்கங்கள்” என்ற  தலைப்பில் பேசினார். மேலும், பாசிகளின் முக்கியத்து வம், அதன் வளர்ப்பு முறைகள், அவற்றின் வகைகள், அதன் மருத்துவப் பயன்பாடுகள் பற்றி விளக்கினார். உயிர்  அறிவியல் துறை மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்: பயிற்சி நிறைவு சான்றிதழ்

புதுக்கோட்டை, ஆக.14 - வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சுய முன்முயற்சி பயிற்சி நிறைவுசெய்த பயனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் மு.அருணா, செவ்வாய்க்கிழமை பாராட்டுச்  சான்றிதழ்களை வழங்கினார்.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “திட்டம் செயல் படுத்தப்பட்டு வரும் வட்டாரங்களில் தொழில் செய்யும் தொழில் முனைவோர்கள் உட்பட 213 பயனாளிகள் சுய  முன்முயற்சி பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டனர். இப்பயிற் சியானது திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நான்கு வட்டாரங்களில் உள்ள மையங்களில் தொழில்சார் சமூக  வல்லுநர்கள் உதவியுடன் 12 வாரங்கள் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்டு நிறைவு செய்த 124 தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

சிபிஎம் போராட்டம் வெற்றி நாகனூர் மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டன

கரூர், ஆக.14 - கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நாகனூர் ரேசன் கடையில் பருப்பு, பாமாயில் கடந்த இரண்டு மாதங் களாக பொதுமக்களுக்கு வழங்காமல்  இருப்பதை கண்டித்தும், உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாகனூர் கிளையின் சார்பில், நாக னூர் ரேஷன் கடை முன்பு ஆக.14  அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து ரேசன் கடை யில் இரண்டு மாதமாக வழங்காமல் இருந்த பருப்பு ஆக. 12 ,13 ஆம் தேதி களில் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது. பின்பு, மாவட்ட பொது விநியோகத் துறை, வட்ட வழங்கல்,  காவல்துறை, கூட்டுறவு வங்கி அதிகாரி கள் போராட்ட குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் விளக்க கூட்டமாக நடை பெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர் முனி யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சக்திவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  ஒன்றிய, கிளை உறுப்பினர்கள் பங்கேற்றனர். போராட்டம் வெற்றி பெற்றதை தொ டர்ந்து, அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், ஆக.14 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம்  அருகே கீழக்கொட்டையூர் ஒழுங்குமுறை  விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்ப னைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். பருத்தி மறைமுக ஏலத்தில் கும்பகோணம், இதைச் சுற்றி யுள்ள கிராமங்களில் இருந்து மொத்தம் 1908 விவசாயி கள், 2368 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம்,  செம்பனார்கோவில், பண்ருட்டி, விழுப்புரம், மகுடஞ்சாவடி, தேனி, விருதுநகர், கொங்கணாபுரம், தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 வணிகர்கள் கலந்துக் கொண்டு, அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.7,289, குறைந்தபட்சம் ரூ.6,609, சராசரி ரூ.6,789 என விலை நிர்ணயித்தனர். பருத்தி யின் மதிப்பு ரூ.1.6 கோடி.

மாணவர்களுக்கு பரிசளிப்பு

பாபநாசம், ஆக.14 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தை அடுத்த கோபுராஜ புரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில், வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள், பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற் றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.  பாபநாசம் ரோட்டரி சங்கம்,  அறம் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்நிகழ்ச் சிக்கு பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சுரேந்திர நாத் வரவேற்றார். அறம் அறக் கட்டளை மனோகரன் பேசி னார். ரோட்டரி சங்க செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

மருத்துவ காப்பீடு திட்ட முகாம்

கும்பகோணம், ஆக.14- தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் ஜவுளி வியாபாரி கள் சங்கம் சார்பில் முதலமைச் சரின் விரிவான காப்பீடு திட்டத் தில் பதிவு செய்யும் முகாம் நடை பெற்றது. முகாமில் ஜவுளி வியாபாரி கள் சங்க செயலாளர் தர்ம ராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மோகன் முகாமை தொடங்கி வைத்தார். ஜவுளி வியாபாரிகள் சங்க  தலைவர் முகமது ஜியாவுத்தீன்,  பொறியியல் கல்லூரி நிர்வாகி சிராஜுதீன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.  காப்பீட்டுத் திட்ட மாவட்ட பொறுப்பு அதிகாரி ராஜா, ஜவுளி வியாபாரிகள் சங்க ஊழியர்களின் குடும்பத்தினர் 200-க்கும் மேற்பட்டோருக்கு காப்பீட்டு திட்ட பதிவுகளை செய் தார். முன்னதாக காப்பீட்டுத் திட்ட மாவட்ட பொறுப்பு அதி காரி ராஜா காப்பீடு திட்டம் குறித்து  கூறினார்.

நூறு நாள் வேலையை முறையாக வழங்க கோரி மனு

அரியலூர், ஆக.14 - நூறுநாள் வேலையை அனைவருக்கும் முறையாக வழங்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் அனைத்து மக்களுக்கும் முறையாக நூறு நாள் வேலை வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்த கூலியை பாகுபாடின்றி வழங்க வேண்டும். குடிநீர்,  மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். பொற்பெயர்ந்த நல்லூரில் ஊராட்சியால் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் பராமரிப்பு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதனை கவனத்தில் கொண்டு பராமரிக்க வேண்டும்.  வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. தா. ழூர் ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.செந்தில்வேல் மற்றும் பொதுமக்கள் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். கட்சியினர் மற்றும் 100 பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.