districts

img

தேசிய சிபிஎஸ்இ ஏரோபிக்ஸ் போட்டி: கரூர் பரணி வித்யாலயா சாதனை

கரூர், அக்.27 - தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் அக்.18, 19, 20 ஆகிய தேதிகளில் தேசிய சி.பி.எஸ்.இ. ஏரோபிக்ஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் தேசிய இறுதிப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடிய கரூர் பரணி வித்யாலயா ஏரோபிக்ஸ் அணி வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது. தேசிய ஏரோபிக்ஸ் போட்டியில் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஜஸ்மிதாஸ்ரீ, சங்கமித்ரா, சஷ்டிகா, பவித்ரா, அக்ஷிதா, கவிதர்ஷினி, செல்ஷியா கேத்ரின் வெள்ளிப்பதக்கமும், 11 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஸ்ரீநிஷா, இஷானி, ப்ரித்திகா, ஷாந்தினி, ரிதன்யாஸ்ரீ, சஜித்ரா, சஸ்தா, லக்ஷிதா வெண்கலப் பதக்கமும் வென்றனர். வெள்ளி, வெண்கலம் வென்ற கரூர் பரணி வித்யாலயா ஏரோபிக்ஸ் அணியினருக்கு ஆசிய ஏரோபிக்ஸ் விளையாட்டு சம்மேளன தலைவர் சந்தோஷ் தேஷ்முக், இந்திய ஏரோபிக்ஸ் சங்க பொதுச் செயலாளர் சந்தோஷ், தெலுங்கானா மாநில டெல்லி பப்ளிக் பள்ளியின் முதன்மை முதல்வர் சுனிதா ராம், சிறப்பு விருந்தினர் பிட்னஸ் டான்ஸர் நிஷி ஜோஷப் ஆகியோர் வெற்றிச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.  மாநிலத்தில் சாம்பியன் அண்மையில் சேலத்தில் தமிழக ஏரோபிக்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஏரோபிக்ஸ் போட்டியில், கரூர் பரணி வித்யாலயா ஏரோபிக்ஸ் விளையாட்டு அணி 15 தங்கப் பதக்கமும், 8 வெள்ளிப் பதக்கமும், 7 வெண்கலப் பதக்கமும் வென்று, 3-வது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் பதக்கம் வென்று பெருமை சேர்த்த பரணி வித்யாலயா ஏரோபிக்ஸ் விளையாட்டு அணி மற்றும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா, உடற்கல்வி ஆசிரியர் சுகன்யா, தேசிய ஏரோபிக்ஸ் நடுவர் சிவகாமி ஆகியோரை தாளாளர் எஸ்.மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷனி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.