districts

img

நம்ம ஊரு அறந்தாங்கி செல்பி பாயிண்ட் துவக்கம்

அறந்தாங்கி, பிப்.1-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் வர்த்தக சங்கம் சார்பில் நம்ம ஊரு அறந்தாங்கி என்ற செல்பி பாயிண்ட் பலகை நகர்மன்ற தலைவர் இரா.ஆனந்த் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.  அறந்தாங்கி நகரின் பெருமையை பறைசாற்றும் வகையில் நகரின் முக்கிய சாலையான பட்டுக்கோட்டை சாலையில் நம்ம ஊரு அறந்தாங்கி என்ற செல்ஃபி பலகையை தயார் செய்யப்பட்டு அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் ஆடிட்டர் ரெ. தங்கதுரை தலைமையில், அறந்தாங்கி திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில், அறந்தாங்கி நகராட்சி சேர்மன் இரா.ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் கல்வெட்டு பலகையினை முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் ஆதி. ரவீந்திர குமார் திறந்து வைத்தார். வர்த்தக சங்க கொடியினை முன்னாள் செயலாளர் பீர்ஷேக் ஏற்றி வைத்தார்.  இந்நிகழ்வில் வர்த்தக சங்க செயலாளர் சுரேஷ்குமார், அதிமுக நகரச் செயலாளர் ஆதி மோகனகுமார் மற்றும் நிர்வாகிகள் செல்வம், கவுன்சிலர் காசிநாதன் உட்பட பல கலந்து கொண்டனர்.