புதுக்கோட்டை, ஜன.4 - காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர் கொள்ள உள்ளூர் அளவி லான விழிப்புணர்வு நடவ டிக்கைகள் அவசியம் என உலக வள நிறுவனத்தின் காலநிலை மீள்தன்மைப் பயிற்சி இயக்குநர் நம்பி அப்பாதுரை தெரிவித்தார். புதுக்கோட்டையில் எம். எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் புதன்கிழமை மாலை நடை பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு குறித்த விளக்கக் கூட்டத் தில் அவர் மேலும் பேசியதா வது: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் வளர்ந்த நாடுகளால் விளைந் தது என வளரும் நாடுகள் குற்றச்சாட்டை முன்வைக் கின்றன. அதனால், கால நிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான நிதியை அதிகளவில் வளர்ந்த நாடு கள் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப் படுகிறது. இதேபோல, எண் ணெய் வள நாடுகளும்கூட, சில ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படலாம் என்ற பட்சத்தில், நிதி வழங்க வேண்டும் என்கிறார்கள். பொதுவாக நம் கை மீறிச் சென்று கொண்டிருக் கும் காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள் வதற்கு நிதி ஒதுக்கீடு என்பது போதுமானதாக இல்லை. என்றாலும், அதைப் பற்றி பேசத் தொடங்கியிருக் கிறோம் என்பதே ஆறுத லான விஷயம். இதை உள்ளூர் மக்களி டம் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஏற்கனவே பல்லாண்டு களாக விவசாயிகள், மீன வர்களிடம் இருக்கும் அறிவை ஆவணப்படுத்தும் பணிகளுடன், அறிவி யல்பூர்வமான ஆய்வுகளும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை இருக் கிறது. அதேபோல, பாடத் திட்டத்திலேயே காலநிலை மாற்றம் தொடர்பாக, கரிமக் கழிவைக் குறைக்கும் நட வடிக்கைகள் தொடர்பாக கொண்டு வருவதும் நல்ல பலனைத் தரும். ஆளும் அரசுகள் முழுமையாக இதைப் புரிந்து கொள் வதும், கொள்கை அடிப்ப டையிலான முடிவுகளை எடுத்து, காத்திரமான நடவ டிக்கைகளை முழுமையாக மேற்கொள்வதும் அவசிய மானது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த வேளாண் காடு கள் உருவாக்கம் முக்கிய மானது. அதன் மாதிரிகளை விவசாயிகளுக்கு எடுத்துச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புதை வடிவ எரிபொருள்களின் பயன்பாட்டால் மிக மோச மான விளைவுகளைத் தொ டர்ந்து சந்திக்க நேரிடும் என்ற புரிதலுடன், புதுப் பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டை ஊக்கு விக்கவும், அதுகுறித்த ஆய்வுகளை மென்மேலும் மேற்கொள்ளவும் தேவை ஏற்பட்டிருக்கிறது. கடல்சார் சூழலியல் தொ டர்பாக, காலநிலை மாற்றத்தில் மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் இந்தியா போன்ற நாடுகள் கவனத்தில் கொள்வது முக்கியம். இவ்வாறு நம்பி அப்பா துரை பேசினார். நிகழ்ச்சியை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறு வனத்தின் முதன்மை விஞ் ஞானி ஆர்.ராஜ்குமார் தொ குத்து வழங்கினார். அறிவி யல் இயக்கத்தின் மாநிலச் செயலர் எஸ்.டி. பாலகிருஷ் ணன் நன்றி கூறினார்.