districts

img

வடவூர், குறிச்சியில் பயணிகள் நிழலகம்: நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், பிப்.27- நாகப்பட்டினம் மாவட்டம் வடவூர், குறிச்சி ஊராட்சிகளில் பயணிகள் நிழல கத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி திறந்து வைத்தார். கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட வட வூர் ஊராட்சி, நிர்த்தனமங்கலத்தில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ரூ.3.5 லட்சம் செலவில் பயணிகள்  நிழலகத்தையும், குறிச்சி ஊராட்சி ஆய் மழை கிராமத்தில் ரூ. 4 லட்சம் செலவில் மற்றுமொரு பயணிகள் நிழலகத்தையும் என  மொத்தம் ரூ.7.5 லட்சம் செலவில் இரண்டு  ஊராட்சிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற் காக பயணிகள் நிழலகத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மீன் வளர்ச்சி கழகத் தலை வர் என்.கௌதமன், திமுக நாகை வடக்கு  ஒன்றியச் செயலாளர் வடவூர் க.ராஜேந்தி ரன், சிபிஎம் நாகை தெற்கு ஒன்றியச் செயலா ளர் ஏ.வடிவேல், வடவூர் ஊராட்சி மன்றத்  தலைவர் ந.மனோகரன், குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் சி.ஜான்சிராணி, வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் ப.குமார், மா.ஹரி கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.