சிபிஎம் கோரிக்கை நாகப்பட்டினம், ஆக.2- நாகப்பட்டினம் நகரத்தில் 33 ஆவது வார்டில் உள்ள அக்கரை குளத்தில் உள்ள பழைய நீரை அகற்றிவிட்டு புதிய நீரை ஏற்றிடுமாறு சிபிஐஎம் நாகை நகர குழு சார்பில் வேண்டுகோள் விடப் பட்டுள்ளது. நாகப்பட்டினம் நகர பொது மக்க ளுக்கு மிகவும் பயனுள்ளதாக அக்கரை குளம் இருந்து வருகிறது. இக்குளத்தை நூற்றுக்கணக்கானோர் தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மக்களும் இக்குளத்தில் குளித்துவிட்டு செல்கின்றனர். கடந்த வருடம் ஜூன் மாதம் இக்குளத்தில் நீர் நிரப்பப்பட் டது. காவிரியில் திறந்து விடப்படுகிற நீர், பாசன வாய்க்கால்கள் மூலம் இக் குளத்தை வந்தடைகிறது. குளத்தில் இருந்த பழைய நீர் வடிகால் வழியாக அகற்றப்பட்டு புதிய நீரை நிரப்பி விடு வது வழக்கம். தற்போது காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடைமடை மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத் திற்கு காவிரி நீர் வந்து சேர்வதற்கு இன்னும் ஒரு சில தினங்கள் இருப்ப தால் அதற்குள்ளாக அக்கரை குளத்தில் இருக்கிற பழைய நீரை மோட்டார் இயந்திரங்கள் மூலம் அகற்றிவிட்டு புதிதாக வருகின்ற நீரை குளத்தில் சேமிக்கலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.பழைய நீரை வடிகட்டு வதற்கான வடிகால் வாய்க்கால் முற்றி லும் தூர்ந்து விட்டதால் பழைய நீர் வெளியில் செல்வதற்கான வாய்ப்பில் லாமல் உள்ளது. இதுகுறித்து சிபிஎம் நாகை நகர செயலாளர் க. வெங்கடேசன் கூறுகை யில், அக்கரை குளத்தின் தண்ணீர் தற்போது மாசு படிந்து பச்சையாக காணப்படுகிறது. பொதுமக்கள் பயன் படுத்துவதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அந்தக் குளத்தில் குளிப்ப வர்களுக்கு தோல் சார்ந்த நோய்கள் வருவதாக கூறுகின்றனர். எனவே நக ராட்சி நிர்வாகம் உடனடியாக காலம் தாழ்த்தாமல் குளத்தில் இருக்கிற நீரை ராட்சத எஞ்சின் கொண்டு இறைத்து விட்டு, இன்னும் ஒரு சில தினங்களுக் குள் வருகின்ற புதிய நீரை குளத்தில் சேமித்து வைத்தால் நாகை நகர வாழ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.