districts

img

சிபிஎம் மணமேல்குடி ஒன்றியச் செயலாளராக என்.காளிதாசன் தேர்வு

அறந்தாங்கி, அக்.19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றிய 14 ஆவது மாநாடு  மணமேல்குடியில் நடை பெற்றது.  மாநாட்டிற்கு வி.ரபீக் கான் - டி.கஸ்தூரி தலைமை  வகித்தனர். மாவட்டக் குழு  உறுப்பினர் கரு.இராம நாதன் கொடியேற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர் எம்.தங்கவேல் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன் துவக்க வுரையாற்றினார்.  9 பேர் கொண்ட ஒன்றியக்  குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியச் செயலாளராக என்.காளிதாசன் தேர்வு செய்யப்பட்டார். புதிய ஒன்றிய குழுவை அறிமுகப் படுத்தி மாவட்டச் செய லாளர் எஸ். கவிவர்மன் பேசி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் வாழ்த்திப் பேசினார்.  மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு போது மான மருத்துவர்கள், செவி லியர்கள், பணியாளர்கள் நியமித்து முழு நேர மருத்து வமனையாக செயல்படுத்த வேண்டும். மணமேல்குடி ஒன்றியத்தில் ஒல்லனூர், செல்லப்பன்கோட்டை, மண மேல்குடி குலச்சிறை யார்நகர், காந்திநகர் உள் ளிட்ட பகுதி சாலைகளை செப்பனிட்டு சரிசெய்ய வேண்டும். வடிகால் வசதி செய்து தர வேண்டும்.  கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பி டிக்கச் செல்லும் மீனவர்களை  இலங்கை கடற்படை தாக்கி கைது செய்வதை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.