திருச்சிராப்பள்ளி, நவ.11 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டக்குழு 24 ஆவது மாநாடு ஞாயிறன்று மணப்பாறையில் நடந்தது. மாநாட்டிற்கு தோழர் கள் கண்ணன், சரஸ்வதி ராஜாமணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் ராஜகோபால் ஏற்றினார். புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் துவக்க உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில், காவிரி உபரி நீரை மணப்பாறை, மருங்கா புரி தாலுகா பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் நிரப்ப வேண்டும். மணப்பாறை பகுதியில் செண்டு தொழிற் சாலை அமைக்க வேண்டும். மணப்பாறை நகர் முழுவதும் பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மணப்பாறை வட்டக் குழு செயலாளராக என்.கோபால கிருஷ்ணன் உள்பட 12 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சிதம்பரம் நிறைவுரையாற்றி னார். முன்னதாக வட்டக் குழு உறுப்பினர் அய்யாவு வர வேற்றார். வட்டக் குழு உறுப் பினர் சுரேஷ் நன்றி கூறினார்.