கும்பகோணம், அக்.23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் ஒன்றிய 24 ஆவது மாநாடு திருநல்லூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ராமன், ராமச்சந்திரன், கீதா ஆகி யோர் தலைமை வகித்தனர். முன்னதாக மூத்த தோழர் பன்னீர்செல்வம் செங் கொடியை ஏற்றினார். ஒன்றி யக் குழு உறுப்பினர் சுதாகர் வரவேற்றார். மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் துவக்கி வைத்து பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர் சி.நாகராஜன் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் க.அருள ரசன் நிறைவுரை ஆற்றி னார். கட்சியின் கும்பகோணம் ஒன்றியச் செயலாளராக என்.கணேசன் உட்பட 11 உறுப்பினர்கள் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. கும்பகோணம் - நீலத் தநல்லூர் சாலையை விரிவு படுத்திட வேண்டும். விவ சாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்து ரையை சட்டமாக்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. கும்பகோணம் ஒன்றிய செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.