அறந்தாங்கி, ஜூலை 22 - அரசுப் பேருந்து கண் ணாடியை உடைத்து, அறந் தாங்கி அரசுப் போக்கு வரத்து கிளை (சிஐடியு) பொருளாளரான ஓட்டுநர் சுந்தரத்தை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் அரங்கே றியுள்ளது. புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அரசு பணி மனைக்கு சொந்தமான அரசுப் பேருந்து ஞாயிறன்று இரவு மணமேல்குடியில் இருந்து விச்சூர், ஆவுடை யார்கோவில் வழியாக அறந் தாங்கி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது இரவு 9.50 மணியளவில் செட்டிவயல் என்ற இடத்தில் மூன்று மர்ம நபர்கள் சரமாரி யாக கல்லை எறிந்து, பேருந் தின் முன்பக்க கண்ணா டியை உடைத்துள்ளனர். மேலும், சிஐடியு கிளை பொருளாளரான ஓட்டுநர் சுந்தரத்தின் (47) முகத்தில் கற்களால் பலமாக தாக்கி யதில், அவரது பற்கள் உடைந்தன. பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள் தப்பி ஓடிய நிலையில், பலத்த காயம் அடைந்த ஓட்டுநர் சுந்தரம், அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார். சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் சுந்தரத்தை சிஐடியு போக்குவரத்து பொதுச் செயலாளர் மணிமாறன், சிபிஎம் தாலுகா செயலாளர் நாராயணமூர்த்தி, சிஐடியு போக்குவரத்து செந்தில் நாதன், புதுக்கோட்டை போக்குவரத்து பொது மேலாளர் இளங்கோவன், போக்குவரத்து வணிக மேலாண்மை சுரேஷ், சக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நேரில் சந்தித்து, ஓட்டு நருக்கு ஆறுதல் கூறினர். ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் கூறு கையில், “கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அறந் தாங்கி பகுதியில் தாராள மாக புழக்கத்தில் இருக் கிறது. இதனால் போதை ஆசா மிகள் இப்படி பேருந்து உடைப்பு, ஓட்டுநர்- நடத்து நரை தாக்குவது வாடிக்கை யாகி விட்டது. தமிழக அரசும், காவல்துறையும் கஞ்சா விற்பவர்களை அடை யாளம் கண்டு கடுமை யான தண்டனை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்களின் அச்சத்தை போக்க முன்வர வேண்டும்” என்றார்.