திருத்துறைப்பூண்டி, நவ.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது திருத்து றைப்பூண்டி வடக்கு ஒன்றிய மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு எம். முருகதாஸ் தலைமை தாங்கினார். நாராயணன் மாநாட்டு கொடியினை ஏற்றினார். ராஜேந் திரன் வரவேற்புரையாற்றினார். மகாதேவன் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி துவக்க உரையாற்றினார். 11 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர், புதிய செயலாளராக முத்துக்குமார சாமி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என். முருகானந்தம் நிறை வுறையாற்றினார். ஆறு, வாய்க்கால் தூர்வாருதல், திருத்துறைப்பூண்டி மேம்பாலம் அமைத்தல், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுதல், குடும்ப அட்டைக்கு மாதம் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். ஆலத்தம்பாடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.