districts

img

தஞ்சை பெரியகோயில் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

தஞ்சாவூர், அக்.16 -  தஞ்சாவூர் பெரிய கோயில் பராமரிப்புக்கு கூடு தல் நிதி ஒதுக்கீடு செய்ய  வேண்டும் என தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, மத்திய கலாச்சாரத் துறைச் செய லாளர் அருநிஷ் சாவ்லா விடம் நேரில் கோரிக்கை மனுவை வழங்கினார். புதுதில்லியில், தஞ்சா வூர் நாடாளுமன்ற உறுப்பி னர் ச.முரசொலி, மத்திய கலாச்சாரத் துறைச் செய லாளர் அருநிஷ் சாவ்லாவை  நேரில் சந்தித்து வழங்கிய  மனுவில் கூறியிருப்ப தாவது:  உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயி லுக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடு களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோயி லின் அழகையும், அங்குள்ள சிற்பங்களையும் கண்டு வியந்து செல்கின்றனர். சிறப்புகள் பல வாய்ந்த இந்த பெரிய கோயிலை இந்திய தொல்லியல் துறை யினர் பராமரித்து வருகின்ற னர்.  கோயிலில் பல்வேறு பராமரிப்புகளுக்கு ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. ஆனா லும் போதிய நிதி இல்லாத காரணத்தால், சில பணிகள் தொய்வாக நடக்கிறது. ஆண்டுதோறும் பெரிய கோயில் பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு செய்யப் படும் நிதியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். அதே போல்,  தஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி மகால்  நூலகம் உள்ளடக்கிய அரண் மனை வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் கலைக் கூடம், தர்பார் ஹால், ஆயுதகோபுரம் உள்ளிட்ட பல்வேறு கண்காட்சி கூடங்கள் உள்ளன. இதனை பார்வையிட தினமும் சுற்று லாப் பயணிகள் வருகின்ற னர். புகழ்வாய்ந்த தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் ஆண்டுதோறும் பல்வேறு சீர்திருத்தப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்தப்  பணிகளுக்கு ஆண்டுதோ றும் கூடுதல் நிதியை ஒதுக் கீடு செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலாச்சாரத் துறை செயலாளர் உடனடியாக, இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநரிடம், ஆய்வு செய்து உரிய நடவ டிக்கை எடுக்குமாறு உத்தர விட்டுள்ளார்.