districts

img

மாத ஊதியம் வழங்கக்கோரி நகராட்சி, டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, நவ.25-  புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 100 பேரும், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள். 30 பேரும் பணியாற்றி வரும் நிலையில், 100 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கவில்லை.  டெங்கு ஒழிப்பு பணி, வீட்டு வரி வசூல், பிளாஸ்டிக் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வரும் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்காததைக் கண்டித்தும், உடன் சம்பளம் வழங்க கோரியும் கடந்த 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை. நக ராட்சி அலுவலகத்தில் உள்ளி ருப்புப் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக சிஐடியு மாவட்டத் தலை வர் முகமது அலி ஜின்னா தலை மையில், சிஐடியு ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் கருணா, செம்பு லிங்கம் மற்றும் தூய்மை பணியா ளர்கள், டெங்கு ஒழிப்பு பணியா ளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி நகராட்சி அலுவல கம் முன்பாக அமர்ந்து உடன் ஊதி யம் வழங்கக் கோரி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.  இதனை அடுத்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. 25 ஆம் தேதி திங்கள் அன்று சம்பளம் தரு வதாக உறுதியளித்தனர். அதனால் போராட்டம் கைவிடப்பட்டது.  வாக் குறுதி அளித்தபடி திங்கள் அன்று சம்பளம் வழங்காததால் சிஐடியு மாவட்டத் தலைவர் முகமதலி ஜின்னா தலைமையில், சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கர்ணா, சிபிஎம் மாவட்டக் குழு தங்கராஜ், சிபிஎம் நகர்ச் செயலா ளர் அலாவுதீன், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மைப் பணியா ளர்கள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்ட னர். ஒப்பந்த தூய்மை பணியா ளர்களுக்கு மாதச்சம்பளம் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும், நகராட்சி வேலை செய்யும் டிபிசி ஊழியர்களின் 3 மாத சம்பளத்தை உடன் வழங்க வேண்டும், நிரந்தர தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த  சொசைட்டி பணம் ரூ.1 கோடி 15 லட்சத்தை உடனே செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு பெரிய கடை வீதி, தாலுகா அலுவலக சாலை, காந்தி பூங்கா சாலை வழியாக பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர்.