தஞ்சாவூர், டிச.2 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபா வாசத்திரம் ஊராட்சி, அப்துல் கலாம் நகரில் 50-க்கும் மேற்பட்ட மீன வர் குடும்பங்களைச் சேர்ந்த சிறுபான்மையினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதன்மூலம், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தக் குடிநீர் தொட்டி யில் இருந்து, தண்ணீர் சாலையில் வழிந்தோடி ஆங் காங்கே தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் செடி கொடிகள் மண்டி, மண் சாலையே தெரியாத வகையில் உள்ளது. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால், இர வில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படு கின்றனர். நீரிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக் காலங்களில் இதை விட கடும் அவதியை இப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். இப்பகுதியில், சாலை அமைக்க, ஒன்றிய குழு உறுப்பினர் நிதி ஒதுக்கியும் இதுவரை சாலை அமைக்கப் படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்து, தார்ச்சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் கிளைச் செயலா ளர் நிஜாம், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.பெரியண் ணன் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.