districts

போலி ஆவணம் தயாரித்து சொத்து அபகரிப்பு சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற விவசாயி

அரியலூர், ஜூன் 26-

     ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவல கம் முன்பு விவசாயி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற் பட்டது.

   அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தென்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கந்தவேல் (60). தென்னூர் கிராமத்தில் இவருக்கு சொந்த மான பூர்வீக இடத்தில் வீடு கட்டி அருகில் உள்ள வயல்வெளிகளை பராமரித்துக் கொண்டு வசித்து வருகிறார்.

   அவரது மூதாதையர்கள் வழியில் வந்த  அந்த சொத்தை, கடந்த 1980 ஆம் ஆண்டு  தனது மகனுக்கு அவர் தான செட்டில் மெண்ட் அளித்துள்ளார். இந்த இடம் தொடர்  பாக அவர்களது உறவினர்களான குஞ்சித பாதம் மற்றும் குடும்பத்தினருக்கு இடையே  தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த ஜூன் 7 அன்று, 1980 ஆம் ஆண்டு கந்தவேல் அவரது மக னுக்கு அளித்த தான செட்டில்மெண்ட் பத்தி ரத்தை ரத்து செய்து மாவட்ட பதிவாளர்  உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்கு ஆட்சேபணை இருந்தால் மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.

     இந்நிலையில் குஞ்சிதபாதம் பிரச்ச னைக்குரிய சொத்தை போலி ஆவ ணங்கள் மூலம் அவரது மகனுக்கு தான  செட்டில்மெண்ட் அளித்து, அதனை ஆண்டி மடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த  வியாழக்கிழமை பத்திரப்பதிவு செய் துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கந்த வேல், பிரச்சனைக்குரிய சொத்தை உரிய  ஆவணங்கள் இல்லாமல் எப்படி பத்திர பதிவு செய்து கொடுத்தீர்கள் என்று சார்பதி வாளரிடம் கேட்டுள்ளார்.

     அதற்கு சரியான விளக்கம் கொடுக்கப்படாததால், மன உளைச்சல் அடைந்த கந்தவேல், பெட்ரோல் வாங்கி  வந்து சார்பதிவாளர் அலுவலக வளா கத்தில் தலையில் ஊற்றிக் கொண்டு, குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை அருகில் இருந்தவர்கள் தடுத்து, அவர் மீதும், உடன் தீக்குளிக்க முயன்ற அவர் மனைவி மீதும் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிமடம் போலீசார், சட்டரீதியாக அவரது பிரச்ச னையை அணுக அறிவுரை வழங்கினர்.