திருநெல்வேலி, அக்.30- பேட்டையில் அதிசய வாழை கன்றை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். நெல்லை மாநகரம் பேட்டை முகமது நயினார் பள்ளிவாசல் 1-வது தெற்கு தெருவை சேர்ந்தவர் சிக்கந் தர் மைதீன். இவர் தனது வீட்டில் வாழை மரங்களை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் வாழை மரங்களின் பக்க கன்று களை அவ்வப்போது தரை மட்டமாக வெட்டி எடுத்து விடுவது வழக்கம். அவ் வாறு வெட்டப்பட்ட பக்க கன்று வழியாக அதிசயமாக வாழை ஒன்று குலை தள்ளி யது. இந்தத் தகவல் அக்கம் பக்கத்தில் பரவியதால் அனைவரும் இந்த அதிசய வாழை குலையை ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.