districts

5 முஸ்லிம்கள் உட்பட நீண்டகால சிறைவாசிகள் 12 பேர் விடுதலை!

சென்னை, பிப். 6 - நீதிக்குப் புறம்பாக நீண்டகாலமாக சிறைகளில் இருந்த முஸ்லிம் சிறை வாசிகளை விடுதலை செய்த தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நன்றியை தெரிவித்து ள்ளது. இதுகுறித்து அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது, மாநிலப் பொதுச்செயலாளர் எம். ராமகிருஷ் ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  4 மாநில மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றம் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, 2014-ஆம் ஆண்டு துவங்கப் பட்டதில் இருந்தே, நீதிக்குப் புறம்பாக நீண்டகாலமாக சிறைகளில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தது. இந்தாண்டு 9.1.2024-இல் நடைபெற்ற 4-ஆவது மாநில மாநாடு வரை, ஒவ்வொரு மாநில மாநாடுகளிலும் அதற்கான தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  வாழ்வுரிமை பாதுகாப்பு  மாநாட்டிலும் கோரிக்கை 2018-ஆம் ஆண்டு நேரடியாகக் கோவைக்குச் சென்று நீண்ட காலமாக சிறையில் வாடும் முஸ்லிம்களின் குடும்ப உறுப்பினர்களையும், அவர் களது வழக்கறிஞர்களையும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் மாநில நிர்வாகிகள் சந்தித்துப் பேசி னர். பின்னர் நீண்டகாலமாக சிறைகளில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யை முன்வைத்து ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்ற சிறுபான்மை மக்கள் வாழ்வுரிமை மாநாட்டை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நடத்தியது. 

துயரங்களை எடுத்துரைத்த சிறைவாசிகளின் குடும்பத்தினர்

அதில், சிறைவாசிகளின் குடும்பத்தி னர் பங்கேற்றதோடு, தாங்கள் படும் அவதியையும் எடுத்துரைத்தனர். அந்த மாநாட்டில் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டதோடு, தமிழகம் தழுவிய அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தி அப்போதைய அரசிடம் வழங்கப் பட்டது. அதில் மத வேறுபாடின்றி பல்லா யிரம் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத் திட்டனர். 

கண்டுகொள்ளாத கடந்தகால ஆட்சியாளர்கள்

ஆனாலும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படவில்லை. எம்ஜி ஆர் நூற்றாண்டு, அறிஞர் அண்ணா  நூற்றாண்டு விழாக்களை ஒட்டி சிறை வாசிகள் விடுதலை செய்யப்பட்ட போது, முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, அரசுக்குக் கடிதம் அனுப்பி யது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ச்சியாக மாநிலம் தழுவிய தர்ணா உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த தேர்தலின் போது பிரதான அரசியல் கட்சிகளி டம் தேர்தல் அறிக்கையில் இதை வாக்கு றுதியாக இணைக்கச் சொல்லியும் வலியுறுத்தப்பட்டது.

கோரிக்கை நிறைவேற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் 

இந்நிலையில் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தலை மையிலான தமிழ்நாடு அரசு அதற்கான ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரைப்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்ய முடிவுவெடுத்து ஆளுநருக்கு அனுப்பியது.  பல மாதங்கள் முடிவெடுக்காமல் இருந்த ஆளுநர், தொடர் வற்புறுத்த லின் பேரில் தற்போது ஒரு சிலரை மட்டும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். அதில் நீண்டகாலமாக சிறைகளில் வாடும் 10 முஸ்லிம் சிறைக் கைதிகளும் அடங்குவர். அதன் படி பாளையங்கோட்டை சிறையி லிருந்து ஒருவர், கோவை சிறையி லிருந்து 6 பேர், புழல் சிறையிலிருந்து ஒருவர் உட்பட 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  இதர முஸ்லிம்களையும் விடுதலை செய்ய வேண்டும் நீண்டகாலமாக சிறையிலிருந்து வந்த 10 முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட் டோரை விடுதலை செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும்  தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் சிறையில் நீண்டகாலமாக அடைபட்டுள்ள இதர முஸ்லிம் சிறை வாசிகளையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.   இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

ஆளுநரோடு நடந்த மூன்று ஆண்டுகால போராட்டம்
 

அறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, 2021 செப்டம்பரில் 700 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை அவர்களின் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதில், 49 சிறைவாசிகளின் ஆவணங்கள் மட்டும் என்.ஆத்திநாதன் கமிட்டி வழிகாட்டுதலின்படி, தமிழக அரசால் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பப்பட்டது. எனினும், இவ்விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.  இவ்விவகாரத்தில் மாநில அரசின் அதிகாரத்தை மீறி, ஆளுநர் நடந்து கொள்வதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் முறையிட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பிய 49 சிறைவாசிகளின் பட்டியலில் இருந்து, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.  இவர்களில் 7 பேர் மதக் கலவரத்தின்போது நடந்த கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அவர்களில் அபு தாஹிர், குண்டு ஜாஹுர், உமாயில் பாபு, ஹாகுல் ஹமீத் மற்றும் ஹாரூன் பாஷா ஆகிய 5 பேர் முஸ்லிம்கள். கமல் என்கிற பூரி கமல் மற்றும் விஜயன் என்கிற விஸ்வநாதன் ஆகிய 2 பேர் இந்துக்கள்.