பெரம்பலூர், அக்.14 - பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் மற்றும் போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவ சங்கர் ஆகியோர் ஞாயிறன்று சர்க்கரை ஆலை இயக்குநர் த.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆகியோர் தலைமையில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். சர்க்கரை ஆலையில் உள்ள இயந்தி ரங்கள் குறித்தும், அவற்றின் தற்போ தைய நிலை குறித்தும் அமைச்சர்கள் ஆலையின் ஒவ்வொரு பகுதியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட னர். அதனைத் தொடர்ந்து, சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள், தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்து ரையாடினர். சர்க்கரை ஆலை அலுவ லர்களுடன் ஆலை நிர்வாகத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகள், விவ சாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை, வழங்கப்பட வேண்டிய தொகை உள்பட விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். அனை வரிடமும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வின் போது டிராக்டர் சங்கத்தினர், சர்க்கரை ஆலைக்குள் டிராக்டரில் கரும்பு லோடு ஏற்றி வரு வதற்கு ஏதுவாக, சாலையை மேம் படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதைக் கேட்ட சுற்றுலாத் துறை அமைச்சர், அடுத்த அரவைப் பரு வத்திற்குள் சாலையை மேம்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க ஆலை தலைமை நிர்வாகிக்கு உத்தரவிட்டார். பின்னர் சுற்றுலாத் துறை அமைச்சர் இராஜேந்திரன் தெரிவிக்கையில், “விவசாயிகள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடி கோரிக் கைகள் பெறப்பட்டுள்ளன. அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்” என்றார்.