கரூர், பிப்.28- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மார்ச் 4-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதையொட்டி மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயுத் தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமையில் செவ்வாயன்று ஆய்வு கூட்டம் நடை பெற்றது. குளித்தலை சட்டமன்ற உறுப்பி னர் இரா.மாணிக்கம், அரவக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் இரா.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் க.கவிதா ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் 12 லட்சம் மரக் கன்று நடும் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து புதிய திட்டங்களுக்கான முடி வுற்ற பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடை பெறுகிறது என்றார். மேலும் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் சொந்த உற்பத்தி யாக 6,000 மெகாவாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் முதல் சூரிய மின்சக்தி பூங்கா திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு அதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்றார். பின்னர் விழா நடைபெற உள்ள இராய னூர் பகுதியில் நடைபெற்று வரும் பணி களையும், திருநிலையூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் பேருந்துநிலைய கட்டுமான பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.