districts

தமிழில் பெயர்ப் பலகை வைக்காதவர்கள் மீது நடவடிக்கை தொடரும் அமைச்சர்

புதுக்கோட்டை, ஆக.16-

       தமிழில் பெயர்ப் பலகை வைக்காதவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரி வித்தார்.

       புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழில் பெயர்ப் பலகை வைக்காதவர்கள் மீது தமிழ் வளர்ச்சித் துறையும், தொழி லாளர் துறையும் அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்து  வருகின்றனர். அந்த நடவடிக்கை தொடரும். அதேபோல, தமிழில் கையொப்பமிடாத அரசுத் துறை அலுவலர்கள் குறித்தும், கோப்புகள் வரும்போதே அவ்வப்போது உயர் அலுவலர்கள் அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள், அந்த  நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    தேர்தல் வாக்குறுதியாக தெரிவிக்கப்பட்ட, பத்திரிகையா ளர் நல வாரியம் அமைக்கப்பட்டு அலுவல் சாரா உறுப்பினர் களாக மூத்த பத்திரிகையாளர்கள் நியமிக்கப்பட்டு 3  கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து வரும் கோரிக்கை கள் குறித்து, முதல்வரிடம் கலந்து பேசி நிறைவேற்ற நட வடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டையில் ராஜா ராஜகோபால தொண்டை மானுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.