புதுக்கோட்டை, ஜூலை 24- புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறையின் சார்பில், 13 புதிய அரசுப் பேருந்துகளை, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கரன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் புதன்கிழமை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். 10 புறநகர் பேருந்துகள், 3 நகரப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு, இரண்டு பெண் நடத்துநர் உள்ளிட்ட 36 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினார். பின்னர் அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கையில், “புறநகர் பேருந்துகள், ஆலங்குடி-கோயம்புத்தூர், அறந்தாங்கி-மேட்டுப்பாளையம், சிதம்பரம்-மதுரை, தஞ்சாவூர்-மதுரை, காரைக்குடி-திருப்பூர், பட்டுக்கோட்டை-ஏர்வாடி, புதுக்கோட்டை-கோயம்புத்தூர், திருச்சி-நாகர்கோவில், திருச்சி-மதுரை ஆகிய வழித்தடங்களில் 10 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் நகரப் பேருந்துகள், பொன்னமராவதி-திருமயம், புதுக்கோட்டை-வாராப்பூர், கந்தர்வகோட்டை-கறம்பக்குடி ஆகிய வழித்தடங்களில் 3 புதிய பேருந்துகள் புதனன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் 136 நகரப் பேருந்துகளில் தினசரி 1.14 லட்சம் மகளிர் விடியல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 42,298 இலவச பயண அட்டைகளும், அரசு கலை கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கு 7,640 இலவச பயண அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசு, தமிழ் அறிஞர்கள் மற்றும் அவர்தம் வாரிசுகளுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கி பயனடைந்து வருகின்றனர்” என்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), மரு.வை.முத்துராஜா (புதுக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊதியப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்: அமைச்சர்
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “போக்குவரத்துத் துறை யில் ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் பணப் பலன்கள் வழங்கப்பட வில்லை. திமுக ஆட்சிப் பொறுப் பேற்ற பிறகு ரூ.1,800 கோடி நிதி வழங்கப்பட்டது. 12 ஆவது ஊதியக் குழு பேச்சுவார்த்தையை மூன்றாண்டுக் குள் அதிமுக அரசு முடிக்கவில்லை. இதனால், திமுக ஆட்சி அமைந்த உடன் முதல்வரின் வழிகாட்டுத லின்படி பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது. சீர்குலைக்கப்பட்டி ருந்த சம்பள விகிதம் சரி செய்யப் பட்டு, ஊதிய உயர்வை வழங்கி யிருக்கிறோம். அடுத்த பேச்சு வார்த்தைக்கான குழுவும் அமைக்கப் பட்டுள்ளது. விரைவில் பேச்சு வார்த்தையை தொடங்குவோம். புதிதாக பணி நியமனம் செய்யப் படும் வரை இடைக்காலத்துக்காக அவுட்சோர்சிங் முறையில் நிய மிக்கப்படுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு 685 பேர் புதிதாக பணியில் நியமிக்கப்பட்ட னர். செப்டம்பர், அக்டோபர் மாதத் தில் புதிதாக ஆள் எடுக்கும் பணி நடைபெறும். அதுவரை இந்த அவுட்சோர்சிங் முறை பயன்படுத்தப் படும். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஓய்வூதியம், அகவிலைப்படியை நிறுத்தினார்கள். இடைப்பட்ட காலத் துக்கு கொடுக்க வேண்டுமா என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஓய்வூதியம், அகவிலைப் படி தர வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். சென்னையில் மினி பேருந்து கள் இயக்குவது குறித்து கருத்து கேட்புக் கூட்டம் முடிந்துள்ளது. அதன் படி சில மாற்றங்கள் செய்யப்பட்டு, முதல்வரின் அனுமதி பெற்று புதிய கொள்கை அறிவிக்கப்படும். புதிய வழித்தடங்களும் வரும். 100 மின்கலப் பேருந்துகள் வாங்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் நடைமுறையில் உள்ளன. 100 பேருந்துகள் வந்த பிறகு மீதி, 400 பேருந்துகள் வாங்குவதற்கு நடவ டிக்கை எடுக்கப்படும். மொத்தம் 500 மின்கலப் பேருந்துகள் வாங்கப் பட உள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழ கத்தில் 20 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. பழுது ஏற்படுவது தவிர்க்க முடியாதது. சரிபார்ப்புப் பணிகளும் நடைபெறுகின்றன. வழியில் பிரச் சனை இல்லாமல் ஓட்டுவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.