தஞ்சாவூர், ஏப்.3- பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், இந்தியா வில் இனிமேல் தேர்தலே நடைபெ றாது என தஞ்சாவூரில் தேர்தல் பரப்பு ரையின் போது அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார். தஞ்சை தொகுதி திமுக நாடாளு மன்ற வேட்பாளர் ச.முரசொலிக்கு வாக்குக் கேட்டு, சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேக ரன் (திருவையாறு) கா.அண்ணா துரை (பட்டுக்கோட்டை) நா.அசோக் குமார் (பேராவூரணி) ஆகியோர் ரெட்ட வயல், ஒட்டங்காடு, புனல்வாசல், பாதிரங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடு பட்டனர். வாக்குச் சேகரிக்க வந்த சுற்றுச் சூழல் துறை அமைச்சருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதி களில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தி யில் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர், “மீண்டும் பிரதமர் மோடி ஜெயித்து ஆட்சிக்கு வந்தால், இனி இந்தியாவில் தேர்தலே நடைபெறாது. ஜனநாயக நாட்டில் நாம் ஒற்றுமையோடு ஓட்டுப் போடும் சூழல் இல்லாமல் போய்விடும். இதனால் சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர்கள் என எந்தப் பதவியும் இல்லாமல் சர்வாதி கார ஆட்சிதான் நடைபெறும்” என்றார்.