கரூர்,ஜன.5- கரூர் மற்றும் குளித்தலை ஊரகப் பகுதிகளில் ரூ.191 இலட்சம் மதிப்பீட்டில் 11 புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை ஜனவரி 5 அன்று மின்சாரம், மதுவிலக்கு -ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் ஏ செந்தில் பாலாஜி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ரூ.1,772 இலட்சம் மதிப்பீட்டில் 14 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலை மை வகித்தார். மேலும், தன்னாசி கவுண்டனூர் ஏ.டி காலனியில் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கும் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பொது மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வருமாறு தொடர்புடைய அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதென அமைச்சர் செந்தில்பாலாஜி தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஶ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக் கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ(அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ண ராயபுரம்), மண்மங்கலம் வட்டாட்சியர் குணசேகரன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்த னர்.