districts

img

அரியலூரில் ரூ.8.72 கோடியில் 7 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள்

அரியலூர், ஆக.28 - அரியலூர் மாவட்டத்தில் ரூ.8.72 கோடி மதிப்பீட்டில், 7 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், குடிநீர் வசதிகள், பள்ளி கட்டடங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன.  அதன்படி, ஜெய ங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி க்குட்பட்ட சிங்கராயபுரம், நல்லனம், உட்கோட்டை, கல்லாத்தூர், ரெட்டிதத்தூர், அய்யூர் மற்றும் அழகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.8.72 கோடி மதிப்பீட்டில் 07 புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.