காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், மார்ச் 30 - காங்கிரசுக்கு ரூ.1,823 கோடி அபராதம் விதித்து கட்சியின் தேர்தல் நிதியை முடக்கி, ஜனநா யகத்தை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே காங்கிரஸ் கட்சி யினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத் துக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலை வர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
சான்றிதழ் வழங்கும் விழா
தஞ்சாவூர், மார்ச் 30- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பாரதி மகளிர் தையல் பயிலகம் சார்பில், சான்றிதழ் வழங்கும் விழா பெரி யார் அம்பேத்கர் நூலக வளாகத்தில் நடைபெற்றது. பயிலகத்தில், பயிற் சியை நிறைவு செய்த மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப் பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் சண்முகப் பிரியா, பேராசிரியர் பிரபா ஆகியோர் பயிற்சி சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினர். பெரியார் அம்பேத்கர் நூலகப் பொறுப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்க டேசன் சிறப்புரையாற்றி னார். பயிற்சி மைய ஆசிரியர் நித்யா வரவேற் றார். பயிற்சி மைய ஆசி ரியர் உமா நன்றி கூறி னார்.
போக்சோவில் ஒருவர் கைது
அரியலூர், மார்ச் 30- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். ஓட்டுநரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காத லித்து வந்ததாக கூறப் படுகிறது. தொடர்ந்து அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகி, சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். இதையறிந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள் ளனர். சிறுமி நடந்த சம்பவம் குறித்து கூறி யதை கேட்டு அதிர்ச்சி யடைந்த பெற்றோர், இதுகுறித்து ஜெயங் கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்துறை யினர் வழக்குப் பதிந்து மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இப்தார் நோன்பு நிகழ்ச்சி
பாபநாசம், மார்ச் 30- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவில் அல் மதரஸத்துன் தக்வா மஸ்ஜித் வளாகத்தில் அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க ஆலோசகர் காதர் பாட்சா வரவேற்றார். தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளு நர் செங்குட்டுவன், கெள ரவ விருந்தினராக பாப நாசம் மாவட்ட உரிமை யியல் மற்றும் நீதித் துறை நடுவர் அப்துல் கனி பங்கேற்றனர். ரோட்டரி சங்க செயலர் ரஹ்ம துல்லா நன்றி கூறினார்.
வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்குகள் நாளை ஆய்வு
தஞ்சாவூர், மார்ச் 30- நாடாளுமன்ற பொதுத் தேர்தலை (2024) ஒட்டி, மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகள் உள்ள டங்கிய, தஞ்சாவூர் நாடாளு மன்றத் தொகுதியில் போட்டி யிடும் வேட்பாளர்களின் செலவின கணக்குகளை, ஏப்.1, 10, 17 ஆகிய தினங்க ளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்ய உள்ளார். இதன் முதற்கட்ட ஆய் வானது 1.4.2024 அன்று காலை 11 மணியளவில் தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி லுள்ள அறை எண்.1 (தரைத்தளம்)-இல் தேர்தல் செலவின பார்வையாளர் தலைமையில், வேட்பாளர் களால் தாக்கல் செய்யப் படவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
100 சதவீதம் வாக்களிப்போம்! ஜமாலியா பள்ளிவாசலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர், மார்ச் 30 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை ஜூம்ஆ தொழுகைக்கு திரண்டிருந்த நூற்றுக் கணக்கான இஸ்லாமியர்களிடம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷணகுமார், அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கூறி, வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இதேபோல் ஆதனூர் புனித அன்னாள் தேவால யத்தில் கிறிஸ்தவ மக்களிடமும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தெய்வானை, தேர்தல் துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் ஜெயதுரை, அலுவலர் அஸ்ரப்அலி, கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் சர்மா, ஜமாஅத் தலை வர் அப்துல் முத்தலிப் உள்ளிட்டோர் கலந்து கொண்ட
கவிஞர் தமிழ்ஒளி நினைவு தின கூட்டம்
திருவாரூர், மார்ச் 30 - கவிஞர் தமிழ் ஒளி 60 ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு சிறப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மு.செளந்தரராஜன் தலைமை வகித்து, கவிஞர் தமிழ் ஒளி கலை இலக்கிய பணிகள் குறித்து உரையாற்றினார், முன்னதாக கவிஞர் தமிழ் ஒளி 60 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த தோழர் ஆர்.டி.யின், அகமும் புறமும் நூலினை சிறப்பாக வெளியிட்ட மாவட்டக் குழு உறுப்பி னர் மன்னார்குடி இயேசுதாஸின் பணியை பாராட்டி கௌரவப்படுத்தப்பட்டது. கவிஞர்கள் சரஸ்வதி தாயுமா னவன், வரத.வசந்தராஜன், தமிழ் ஒளி குறித்து கவிதை கள் வாசித்தனர். பாலம் செல்லத்துரை, தமிழ் ஒளி குறித்து பாடல் பாடினார். மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்கடேசன், பொருளாளர் மு.செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் மா.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரவையில் இந்தியா கூட்டணியின் சார்பாக நாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜை, பெருவாரியான வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் சு.அம்பிகாபதி நன்றி கூறி னார்.
தமிழ்ப் பல்கலை.யில் அறக்கட்டளைகள் சொற்பொழிவு
தஞ்சாவூர், மார்ச் 30- தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறை யில், ஔவை தமிழ், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், யு. சுப்பிரமணியம், திவான் பகதூர் தி.மு.நாராயண சாமிப் பிள்ளை மற்றும் காசியா அசீனா நயினார் ஆகிய ஐந்து அறக்கட்டளைகளின் சொற்பொழிவுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. தனலெட்சுமி வரவேற்றார். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். முதல் அமர்வில் “சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் கதைகளில் மாற்றுச் சிந்தனைகள்” எனும் தலைப்பில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தஞ்சை மாநகரத் தலைவர் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். 2 ஆம் அமர்வில் பட்டிமன்றப் பேச்சாளர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.கண்ணதாசன், “எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம்” எனும் தலைப்பில் உரையாற்றி னார். இலக்கியத் துறைத் தலைவர்(பொ) முனைவர் அ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், அனைத்துத் துறையின் பேராசிரி யர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆய்வியல் நிறைஞர், முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையில் 3 பேர் வேட்பு மனு வாபஸ்
திருநெல்வேலி, மார்ச் 30- திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி யில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர். 15 வேட்பாளர்களுக்கு அதிகமாக களத்தில் உள்ளதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் திருநெல்வேலி தொகுதியில் பயன் படுத்தப்படுகிறது. திருநெல்வேலி தொகுதியில் போட்டி யிடக்கூடிய 18 சுயேச்சை வேட்பாளர்களுக் கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்தி கேயன் தலைமையில் தேர்தல் பார்வை யாளர்கள் முன்னிலையில் வேட்பாளர் களுக்கு சின்னங்கள் வழங்கப்பட்டு அதற் கான அத்தாட்சி கடிதமும் வழங்கப்பட்டது. இறுதியாக திருநெல்வேலி தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பா ளர்கள் 4 பேர் ,பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த ஏழு பேர் சுயேச்சை கள் 12 பேர் என 23 பேர் களத்தில் உள்ள னர்.
மணிலா, எள்ளு விளைபொருட்களை விற்க டோக்கன் பெறுவது அவசியம்
அரியலூர், மார்ச் 30 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், மணிலா, எள்ளு விளைபொருள்களை விற்பனை செய்ய முன் அனுமதி சீட்டு பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட அலுவலகம் வெளி யிட்ட செய்திக் குறிப்பில், “விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கூட்ட நெரிசலை தவிர்த்திடவும், நேர விரயத்தை கணக்கில் கொண்டும் திங்கள்கிழமை (1.4.2024) முதல் டோக்கன் (முன் அனுமதி சீட்டு) வசதி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மணிலா மற்றும் எள்ளு விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு டோக்கன் பெற்று, அதில் குறிப் பிட்டுள்ள நாளில் தங்களது விளைபொ ருளை கொண்டு வந்து விற்பனை செய்து மாலைக்குள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்துடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது வேதாரண்யத்தில் அமைச்சர் ரகுபதி சாடல்
வேதாரண்யம், மார்ச் 30- நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத் தில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை வகித்தார். நாகை நாடாளுமன்ற தொகுதியின், திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜுக்கு வாக்கு சேகரித்து அமைச்சர் ரகுபதி உரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்த லில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக கூட்டணி களத்தில் நிற்கிறது என்ற எண்ணத்தில்தான் நாம் தேர்தல் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பாஜக மறைமுகமாக ஒரு அமைப் புடன் கூட்டணி வைத்திருக்கிறது. அது இந்திய தேர்தல் ஆணையத்துடனான கூட்டணி. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளவர் களுக்கு தேவையான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்குகிறது. மற்றவர்களுக்கு ஒதுக்குவதில்லை” என்றார். சிபிஎம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் நாகைமாலி. சிபிஐ மாவட்டச் செயலா ளர் சிவகுரு பாண்டியன், காங்கிரஸ் கட்சி பி.வி.ராஜேந்திரன், திமுக மாவட்டச் செயலா ளர் கௌதமன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
வருமான வரித்துறை விதித்துள்ள அபராதம் பகல் கொள்ளையை விட கொடுமையானது அமைச்சர் எஸ்.ரகுபதி பேச்சு
புதுக்கோட்டை, மார்ச் 30 - அரசியல் கட்சிகளுக்கு வருமான வரித் துறை விதித்துள்ள அபராதத் தொகை என்பது பகல் கொள்ளையைவிட கொடுமை யானது என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியி டாததற்கான காரணம் வேடிக்கையாக உள்ளது. மாதந்தோறும் அவருக்குக் கிடைத்த ஊதியத்தில் ஒரு பகுதியை சேர்த்து வைத்திருந்தாலே, தேர்தலை சந்தித்து இருக்கலாம். அவர் சொல்வது பச்சைப் பொய் என்பது நாட்டு மக்கள் அனை வருக்கும் நன்கு தெரியும். அரசியல் கட்சிகளுக்கு வருமான வரித்துறை விதித்துள்ள அபராதம் என்பது பகல் கொள்ளையைவிட கொடுமையானது. இது இந்தியாவிலேயே மிகப்பெரிய கொள்ளை. ஒன்றிய அரசை அகற்ற வேண்டும் என்பதிலும், இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தி லும் இந்திய வாக்காளர்களும் தமிழ்நாட்டு வாக்காளர்களும் உள்ளனர். திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் சின்னங்கள் என்ன என்பதை தேடிப் பார்த்து வாக்களிக்கக் கூடிய நிலையில் வாக்காளர்கள் உள்ளனர். ஓபிஎஸ் தேனியில் 2000 ரூபாய் கொடுத் தார். ராமநாதபுரத்தில் ரூ. 5000 கொடுத்தா லும் டெபாசிட் வாங்கப் போவதில்லை. கொள்ளையடித்த பணத்தை மக்கள் மகிழ்ச்சி யுடன் வாங்கிக் கொள்ளட்டும். நாங்கள் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசி யமில்லை. கொடுக்கவும் மாட்டோம். எங்களது வெற்றி உறுதி” என்றார்.