தஞ்சாவூர், டிச.17- தொழில்துறையில் தமிழ்நாடு 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என தஞ்சை மாவட்ட தொழில் முத லீடுகள் மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு, தேசிய உணவு தொழில்நுட்பம், தொ ழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன கூட்டரங்கில் மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில் முனை வோர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார். மாநாட்டில் அனைத்து வங்கி களின் சார்பில் 37 பயனாளிகள் ரூ.14 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் வழி காட்டுதலின்படி, அரசு தொழில் முனைவோர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. தமிழ்நாட்டில் நடைபெற இருக் கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடா னது, நமது மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது மாநாடு ஆகும். இதற்கு முன்பு 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடு கள் பங்கேற்கும் உலக முதலீட்டா ளர்கள் மாநாடு (GIM) சென்னையில் ஜனவரி 2024 இல் நடைபெறும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப் பட்டு, கடந்த ஆகஸ்ட் 10 அன்று அதற் கான இலட்சினையும் வெளியிடப் பட்டது. தமிழகம் முழுவதும் உள்ளூர் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு, தமிழ்நாட்டிற்கு 66 ஆயிரம் கோடி முதலீடுகளை திரட்டவும், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூ.1,092 கோடிக்கு திட்ட இலக்கீடும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. முதலமைச்சரின் தொடர் நடவடிக்கைகளால், தொழில் துறை யில் 14-வது இடத்தில் இருந்த தமிழ் நாடு தற்போது 3 ஆம் இடத்தை பெற்றுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 34 பேருக்கு மானியம் வழங்கி தொழில் துவங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 1.4.2022 முதல் 16.12.2023 வரை 593 பேருக்கு ரூ.20.21 கோடி மானியத்துடன்கூடிய வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டு மாநாடு 2024 தொடர்பாக இதுவரை 85 நிறுவனங் களுடன் ரூ.1675.66 கோடிக்கு புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் 4,629 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு-2024 சென்னையில் 2024 ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். கட்டுமானப் பணிகள் ஆய்வு பின்னர், மேலவஸ்தா சாவடி யில் டைடல் பார்க் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். மாநாட்டில், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்) தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், மாவட்ட வருவாய் அலு வலர் தெ.தியாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சு.க.முத்து செல்வம் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.