அறந்தாங்கி, பிப்.12 - தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் பொங்கல் திருநாளையொட்டி, நடத்தப்பட்ட மாநில அளவிலான பானை அலங்கரித்தல் போட்டியில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ச.கார்த்திகா வெற்றி பெற்றார். அந்த மாணவிக்கு பிப்.10 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் பாராட்டு சான்றிதழ்-பதக்கம் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவிக்கு ஆவுடையார்கோயில் பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின், வகுப்பாசிரியர் முத்துராக்கப்பன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி தமிழரசி உள்ளிட்டோர் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.