நாகர்கோவில், ஜன. 1- தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகை யில் புதனன்று (ஜன.1) வேர்களைத் தேடி பண்பாட்டு கலை பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்த புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள் இளம் மாணவர்கள், தாய்த்தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என அறி வித்தார். அதனடிப்படையில், இந்த பண்பாட்டு பயணம் “வேர்களைத் தேடி” என்ற பெயரில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் மூலம் சுற்றுலாத்துறை, பண்பாட்டுத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, தொல்லியல் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறைகளுடன் இணைந்து இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்த இரண்டு கட்ட பயணத்தில் 157 அயலகத்தமிழ் மாணவ, மாணவியர்கள் முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு, தமிழின் தொன்மை, தமிழர் வாழ்வியல் கலாச்சாரம் குறித்து விளக்கப்பட்டது. தமிழர்களின் கலைகளை அறி முகப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து மூன்றாம் கட்ட பயணமாக உகாண்டாவை சேர்ந்த ஒருவர் , நார்வேயை ஒருவர், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஒருவர் , மொரிசியசைச் சார்ந்த 10 பேர், மலேசியாவைச் சேர்ந்த 11 பேர், இலங்கை சார்ந்த 6 பேர், ஆஸ்தி ரேலியாவைச் சேர்ந்த 4 பேர் , கனடாவைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர், மியான்மரைச் சேர்ந்த ஒருவர் என 10 நாடுகளைச் சேர்ந்த 38 அய லகத்தமிழ் மாணவ, மாணவியர் களுடன் 29.12.2024 அன்று தொடங் கப்பட்டு 12.01.2025 அன்று வரை நடைபெறும். இக்கலை பயணமானது அயல் நாடுகளில் வாழும் 18 முதல் 30 வய துக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு வரவழைத்து தமிழ் மற்றும் தமி ழர்களின் பெருமிதங்களை உண ரும் வகையில் தமிழ்நாட்டின் வர லாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரி வித்தார். அதனைத்தொடர்ந்து புலம்பெயர் தமிழக மாணவ - மாணவியர்களுக்கு அமைச்சர் நினைவு பரிசு வழங்கினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் கும்மி டிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், அய லகத்தமிழர் நல வாரிய துணை இயக்குநர் கி.ராமேஷ், அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர் மீரான், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன், அலுவலர்கள், புலம்யெர் தமிழக மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.