districts

img

அரசுப் பள்ளியில் மரம் நடும் விழா: அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

அறந்தாங்கி, நவ.22 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி தாலுகா பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடை பெற்ற மரம் நடும் விழாவில் தமிழக  சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரு மான சிவ.வீ.மெய்யநாதன் பங் கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தார். முன்னதாக பள்ளியில் அமைச்ச ருக்கு உற்சாக வரவேற் பும் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள் தங்களுக்கு மிதிவண்டி நிறுத்தம் ஏற்படுத்தி தரவேண்டும் என அமைச்சரிடம் கோ ரிக்கை வைத்தனர். அவர் களது கோரிக்கையை உடனே நிறைவேற்றும் வகையில், அமைச்சர் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி  சண்முகநாதன், திமுக அறந்தாங்கி  தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்.கணேசன், பள்ளி மேலாண்மை குழு  தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.